ஆப்நகரம்

10ஆம் வகுப்பு மாணவர்கள் ''ஆல் பாஸ்''..! அமைச்சரவை அதிரடி முடிவு...

தெலங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 8 Jun 2020, 8:27 pm
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகியுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. மேலும், இதுவரை நடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு பள்ளி தேர்வுகளின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கிரேடு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்


நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாட்டில் மாநில அரசுகள் குழப்பமடைந்துள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்னும் நிலைப்பாட்டில் அரசு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்த அரசு, ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ஜுன்11ஆம் தேதி தெரியும்!

இந்நிலையில் கொரோனா பரவலை சுட்டிக்காட்டி, இரண்டு மாதங்கள் கழித்து தேர்வை நடத்த வேண்டும் எனக்கோரி ஆசிரியர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடுத்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வினை தள்ளி வைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வழக்கை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அடுத்த செய்தி