ஆப்நகரம்

போலீஸ் துப்பாக்கிச்சூடு; அசாமில் 11 பேர் பலி

போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து அசாம் மாநிலத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

TNN 11 Apr 2016, 8:12 pm
கவுகாத்தி: போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து அசாம் மாநிலத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 11 dead accidently by police shot out at assam
போலீஸ் துப்பாக்கிச்சூடு; அசாமில் 11 பேர் பலி


அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மற்றும் மருமகள் கடத்தல் சம்பவத்தில், மகன் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்தவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற காவல் நிலைய அமுற்றுகையின் போது, சிலர் காவல் நிலையத்தை நோக்கி கற்களை வீசினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து போராட்டக்காரர்கள் மீது விழுந்தது.

இதனால் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி