ஆப்நகரம்

பாக்., சிறுவனுக்கு இனிப்பு வழங்கி திருப்பி அனுப்பிய ராணுவம்

வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டுச் சிறுவனை இந்திய அதிகாரிகள் இனிப்பு வழங்கி பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

Samayam Tamil 28 Jun 2018, 4:26 pm
வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டுச் சிறுவனை இந்திய அதிகாரிகள் இனிப்பு வழங்கி பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
Samayam Tamil sdf


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் பகுகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற 11 வயது சிறுவன் கடந்த ஜூன் 24ஆம் தேதி வழிதவறி எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளான்.

அவனை இந்திய ராணுவத்தினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அச்சிறுவனை பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புவது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடுகளைச் செய்தனர்.

இதனையடுத்து புதன்கிழமை அந்தச் சிறுவன் இனிப்பு மற்றும் புதிய ஆடைகளுடன் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறான்.

அடுத்த செய்தி