ஆப்நகரம்

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி விழா: ஆற்றில் மூழ்கி 12 பேர் மாயம்

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, 12 பேர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

TNN 7 Sep 2016, 6:49 pm
ஷிவ்மோகா: கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது, 12 பேர் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
Samayam Tamil 12 people feared drowned in tungabhadra river in shivamogga district
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி விழா: ஆற்றில் மூழ்கி 12 பேர் மாயம்


கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் ஏராளமான சிலைகள் வண்டிகளில் கொண்டு வரப்பட்டு, துங்கபத்ரா ஆற்றில் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டது.
Karnataka: 12 people feared drowned in Tungabhadra river in Shivamogga district, incident happened during Ganesh Visarjan— ANI (@ANI_news) September 7, 2016
அப்போது ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக வந்து கொண்டிருந்தது. இருப்பினும் பொதுமக்கள் சிலைகளுடன் ஆற்றில் இறங்கினர். இதில் நிலை தடுமாறி, சிலர் ஆற்றில் மூழ்கத் தொடங்கினர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. ஒருவர் பின் ஒருவராக நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 12 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி பல்வேறு இடங்களில் முடக்கி விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி