ஆப்நகரம்

போதையில் மிதக்கும் விமானிகள்-மும்பையில்தான் அதிகமாம்..!

மது அருந்துவிட்டு விமானம் ஓட்டும் பைலட்கள் மும்பையில் தான் அதிகம் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 29 Jul 2016, 5:23 am
மது அருந்துவிட்டு விமானம் ஓட்டும் பைலட்கள் மும்பையில் தான் அதிகம் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil 122 pilots reported drunk for duty in last three years
போதையில் மிதக்கும் விமானிகள்-மும்பையில்தான் அதிகமாம்..!


கடந்த மூன்று ஆண்டுகளில் 16 நாடுகளின் விமான நிலையங்களில்,பணிக்கு செல்லும் முன் விமானிகளிடன் எடுக்கப்பட்ட மருத்துவ சோதனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி மும்பை விமான நிலையத்தில் மட்டும் 34 விமானிகள் மது அருந்துவிட்டு பணிக்கு வந்துள்ளதாகவும்,இந்திய அளவில் 122 விமானிகள் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லியில் 31 விமானிகளும்,கொல்கத்தாவில் 18 விமானிகளும் குடிபோதையில் பணிக்கு வந்த போது பிடிபட்டுள்ளனர்.குறைந்தபட்சமாக சென்னையில் 10 விமானிகளும்,பெங்களூருவில் 9 விமானிகளும் பிடிபட்டுள்ளனர்.பலரின் உயிருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய விமானிகள்,அலட்சியமாக மது போதையில் வருவது தொடர்ந்தால், மாதத்திற்கு ஒரு விமானம் கூட தொலைந்து போகும் போல...

அடுத்த செய்தி