ஆப்நகரம்

ராஜஸ்தானில் கோர விபத்து : 13 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 27 Sep 2019, 5:18 pm
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மார் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில், ஒரு பயணிகள் பேருந்து இன்று மதியம் பயணித்து கொண்டிருந்தது.
Samayam Tamil rar


அப்போது அந்த சாலையின் எதிர்திசையில் சொகுசு வேன் (கேரோவேன்) அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

பேருந்தும், கேரோவேனும் ஒன்றையொன்றை கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கேரோவேன் பேருந்தின் மீது வந்த வேகத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

தாதனியா என்ற கிராமத்துக்கு அருகே நிகழ்ந்த இந்த கோர விபத்தில், பேருந்தில் பயணித்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 8 பேர் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீஸார், இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி