ஆப்நகரம்

ஆந்திராவில் உல்லாச படகு சவாரியின் போது விபத்து : 14 பேர் பலி

அனந்தபுரம் மாவட்டத்தில் திருவிழாவுக்கு சென்ற போது ஏரியில் படகு மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழப்பு.

TOI Contributor 28 Apr 2017, 8:31 pm
ஆந்திரா: ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் திருவிழாவுக்கு சென்ற போது ஏரியில் படகு மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழப்பு.
Samayam Tamil 14 feared dead as boat capsizes in anantapur
ஆந்திராவில் உல்லாச படகு சவாரியின் போது விபத்து : 14 பேர் பலி


ஆந்திரா மாநிலம், அனந்தபூரில் உள்ள ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்ற ராமைய்யா என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 20 பேர், கோயிலுக்கு அருகில் உள்ள எர்ராடிமா ராஜூ ஏரியில் கேளிக்கைக்காக படகு சவாரி சென்றனர்.

சிறிய அளவிலான படகில், அளவுக்கதிகமாக ராமைய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 20 பேரும் ஏறி சென்றனர். ஏரிக்கு நடுவே சென்ற போது திடீரென ஆட்டம் கண்ட அந்த படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர்.

விபத்து நடந்த இடத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு மற்றும் மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி