ஆப்நகரம்

உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்... 14 பேரின் உயிரை பலி கொண்ட பேருந்து விபத்து

பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 4:40 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 14 பேர் பலியான சம்பவம், அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்... 14 பேரின் உயிரை பலிகொண்ட பேருந்து விபத்து


டெல்லியிலிருந்து, பிகார் மாநிலம் மோதிஹரிக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு பேருந்து புதன்கிழமை நள்ளிரவு பயணித்து கொண்டிருந்தது.

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்... மாமியார் மீதான கோபத்தில் பெத்த குழந்தையை கொன்று புதைத்த 'பாசக்கார' தாய்

ஆக்ரா -லக்னௌ தேசிய நெடுஞ்சாலையில் ஃபெரோஷாபாத் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, பேருந்துக்கு முன் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது சொகுசு பேருந்து வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பயணிகள் அனைவரும் சைஃபைய் என்ற இடத்தில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து.! டயரில் சிக்கிய வாலிபர் பலி... பதைபதைக்கும் வீடியோ!

அவர்களின் 35 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பேருந்து ஓட்டுநர் தமது கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாக, போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி