ஆப்நகரம்

COVID - 19: உத்தரப்பிரதேசத்தில் 15 மாவட்டங்களுக்கு சீல்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 15 மாவட்டங்கள் முற்றிலும் இன்று இரவு முதல் சீல் வைக்கப்படுகிறது.

Samayam Tamil 8 Apr 2020, 3:43 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் 15 மாவட்டங்கள் இன்று இரவு முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை சீல் வைக்கப்படுகிறது.
Samayam Tamil உத்தரப்பிரதேசம்


இதற்கான அறிவிப்பை அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர் ஆர்.கே. திவாரி இன்று விடுத்துள்ளார். சீல் வைக்கப்படும் பகுதிகளில் ஹோம் டெலிவரி, மருந்துக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பலருக்கு இந்த தொற்று பரவாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லக்னோ, கவுதம் புத்தா நகர், நொய்டா, காசியாபாத், மீரட், ஆக்ரா, ஷாம்லி, சஹரன்பூர் உள்பட 15 மாவட்டங்களில் சீல் வைக்கப்படுகிறது.

கொரோனா, உள்ளேன் ஐயா! கோவிட், யெஸ் சார்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரைக்கும் 326 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் மீண்டுள்ளனர். இந்த மாநிலத்தின் 37 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது.
கொரோனா பயம்: ஊமத்தங்காயை தின்றவர்களுக்கு சிகிச்சை!
தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
போதைப் பழக்கத்தை விரட்டும் கொரோனா வைரஸ்!
அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடியும் இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி