ஆப்நகரம்

கர்நாடகாவில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளிச் சிறுமி கர்ப்பம்!

கர்நாடக மாநிலத்தில் 15வயது பள்ளிச் சிறுமியை அவரது பாதுகாவலர் கடந்த சில மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததில் அச்சிறுமி தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Bangalore Mirror Bureau 9 Feb 2017, 11:43 am
கொப்பல்: கர்நாடக மாநிலத்தில் 15வயது பள்ளிச் சிறுமியை அவரது பாதுகாவலர் கடந்த சில மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததில் அச்சிறுமி தற்போது கர்ப்பம் தரித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil 15 year old gets pregnant after being raped by her guardian in karnataka
கர்நாடகாவில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளிச் சிறுமி கர்ப்பம்!


கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பஸ்ரிகட்டே எனும் கிராமத்தில் கூலித் தொழில் செய்யும் கிருஷ்ணப்பா என்பவர் தனது கண்பார்வையற்ற மாணவிசாந்தம்மாவுடன் வசித்து வருகிறார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுமி இவர்களது பாதுகாப்பில் தான் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடிபோதையில் வீட்டிற்கு வரும் கிருஷ்ணப்பா சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வெளியே மூச்சுவிடக் கூடாது என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார் என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.

பள்ளிச்சிறுமி கர்ப்பம் தரித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர் குற்றவாளியான கிருஷ்ணப்பா, ஏற்கனவே அவரது வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு வீட்டில் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

A 15-year-old girl student of a government school was allegedly raped by her guardian for the past several months following which she became pregnant, police said on Wednesday.

இச்செய்தியை கன்னடத்தில் படிக்க :
http://vijaykarnataka.indiatimes.com/district/chikkamagaluru/minor-girl-gets-pregnant-after-rape-by-stepfather/articleshow/57025819.cms

அடுத்த செய்தி