ஆப்நகரம்

அரசு அங்கீகாரம் பெறாத 1,500 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அரசின் அங்கீகாரம் பெறாத 1,500 பள்ளிகளுக்கு கேரள அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 23 Mar 2018, 4:24 am
திருவனந்தபுரம்: அரசின் அங்கீகாரம் பெறாத 1,500 பள்ளிகளுக்கு கேரள அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil 1500-more-schools-selected-for-setting-up-atal-tinkering-labs-653x393


கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் லீக் கட்சி, எம்.எல்.ஏ., காதர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உத்தரவின் படி, போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து, “அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு கடந்த 2013ஆம் ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது, 1,194 பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்தன. அந்தப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பிறகு, 395 பள்ளிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டது.

மற்ற பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொள்ள அவகாசம் தரப்பட்டது. ஆனால், இன்னும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல், இயங்கும் அங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகளை மூட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் பினராயி கூறினார்.

இதனால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்த செய்தி