ஆப்நகரம்

ஒருவழியாக ஒன்று சேர்ந்த பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்.!

நாடாளுமன்ற தாக்குதலின் 16வது நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்த நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

TNN 13 Dec 2017, 12:58 pm
நாடாளுமன்ற தாக்குதலின் 16வது நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்த நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Samayam Tamil 16th indian parliament day
ஒருவழியாக ஒன்று சேர்ந்த பாஜக, காங்கிரஸ் தலைவர்கள்.!


கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அரசியல் தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று உயிர்தியாகம் செய்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்தவகையில் நாடாளுமன்ற தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., முன்னாள் தலைவர் சோனியா, புதிய தலைவர் ராகுல், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது எதிரும் புதிருமாக உள்ள காங்கிரஸ் தலைவர்களும், பாஜக தலைவர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா, மற்ற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் மன்மோகனை கடுமையாக விமர்சித்த மோடி, இன்று காரில் வந்து இறங்கிய மன்மோகனை கைகுலுக்கி வரவேற்று, நலம் விசாரித்தார்.

குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாவதற்கு முன்பிருந்தே காங்கிரஸ் பா.ஜ.க தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி