ஆப்நகரம்

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 17 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 14 Sep 2018, 6:06 pm
ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 177912725615369118461740636172JK-Accident-edit-2


ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 13 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து கெஷ்வானிலிருந்து கிஷ்த்வார் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது எனவும் 30 பேர் வரை அதில் பயணித்தனர் எனவும் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானம் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணியில் 11 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதியை வழங்குவதாக கிஷ்த்வார் துணை கமிஷனர் அங்ரேஸ் சிங் ரானா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் கிஷ்த்வாரில் 3வது முறையாக பெரியதாக பேருந்து விபத்து நேர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி