ஆப்நகரம்

19 ஆயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கல் - அருண் ஜெட்லி அறிவிப்பு

இந்தியர்கள் சட்டவிரோதமாக 19 ஆயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல் வெளியிட்டுள்ளார்.

TNN 22 Jul 2017, 12:45 pm
இந்தியர்கள் சட்டவிரோதமாக 19 ஆயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil 19 cores black money has been found by income tax department said by arun jaitley
19 ஆயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கல் - அருண் ஜெட்லி அறிவிப்பு


இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

“சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு வழங்கிய தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடந்தது . இந்த விசாரணையில் முக்கியமான தகவல்கள் வெளியானது. 700 இந்தியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் முறையாக வரி செலுத்தவில்லை . அதன்மூலம் 11 ஆயிரத்து 10 கோடி ரூபாயை அவர்கள் பதுக்கி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 72 புகார்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் 628 இந்தியர்கள் கணக்குகள் வைத்துள்ளனர். அந்த வங்கிக் கணக்கில் சட்டவிரோதமாக 8 ஆயிரத்து 437 கோடி ரூபாய் பதுக்கி உள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. 162 விவகாரங்களில் 1,287 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ,84 விவகாரங்களில் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

19 cores black money has been found by income tax department said by arun jaitley

அடுத்த செய்தி