ஆப்நகரம்

குடியரசு தினத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவத்தினருக்கு விருது!

குடியரசு தின விழாவில் நாட்டில் துறை சார்ந்து சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக...

Samayam Tamil 25 Jan 2020, 7:16 pm
குடியரசு தினத்தில் நாடு முழுவதும் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களைத் தேர்வு செய்து மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரியும் 170க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil republic-day-parade


இதன் முதற்கட்டமாக 19 ராணுவ உயர் அதிகாரிகள், 6 ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 151 சேனா விருதுகள், 8 யுவ சேவா விருதுகள் குடியரசு தினத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

வடக்கு ராணுவத்தின் கமெண்டர் லெப்டினெண்ட் ஜென் ரன்பீர் சிங் உள்பட 19 ராணுவ உயர் அதிகாரிகளுக்கு விஸ்ஹிஷிட் சேவா விருதுகளும், 6 ராணுவ வீரர்களுக்கு செளரியா சக்ரா விருதும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

வீரதிரச் செயலுக்கான விருதுகள் அறிவிப்பு... விருதுகளை அள்ளியிருக்கும் ஜம்மு காஷ்மீர் ‘மாநிலம்’...

விருதுகள் வழங்கப்பட்ட தகவலை டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தகவலாகத் தெரிவித்தார். தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவர் விருதை இந்த ஆண்டு 4 பேர் பெறுகின்றனர். இதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவருக்கு விருது போக, மீத 3 விருதுகளும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேருவோடு ஒப்பிட்டால் மோடி ஒரு ‘சிறு’ தலைவர் - காங்கிரஸ் எம்.பி.ஹுசைன் தல்வாய்

துணிச்சலுக்கான காவல் துறைப் பதக்கங்களை இந்தியா முழுதும் இந்த ஆண்டு மொத்தம் 286 பேர் பெறுகின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட இடம் பிடிக்கவில்லை.

அதேபோல, சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் விருது 93 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் பெறுகின்றனர். குடியரசுத் தலைவர் பாரட்டுதலுக்குரிய சேவைக்கான காவலர் விருது 657 பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. இந்த விருதை தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேர் பெறுகின்றனர்.

அடுத்த செய்தி