ஆப்நகரம்

பசுக்களை திருடியதாக இருவருக்கு மொட்டை அடித்து கிராமமக்கள் தண்டனை

உத்தரபிரதேசத்தில் பசுவைத் திருடியதாக கூறி இரண்டு நபர்களை கிராம மக்கள் கடுமையாக அடித்து கொடுமைபடுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 9 Jan 2018, 10:52 am
உத்தரபிரதேசத்தில் பசுவைத் திருடியதாக கூறி இரண்டு நபர்களை கிராம மக்கள் கடுமையாக அடித்து கொடுமைபடுத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 2 cow thieves tonsured paraded in uttar pradesh
பசுக்களை திருடியதாக இருவருக்கு மொட்டை அடித்து கிராமமக்கள் தண்டனை


உத்தரபிரதேசத்தில் உள்ள பலியா என்ற கிரமத்தில் இரண்டு நபர்கள் பசுக்களை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் இருவரையும் அடித்தும் அவர்களுக்கு மொட்டை அடித்தும், பசு திருடர்கள் என்ற வாசகம் எழுதிய அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்ததும், இருவரை துன்புறுத்தியவர்கள் தப்பிவிட்டனர். பசுக்களை திருடியதாக சொன்ன இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களை தாக்கியது யார் என்று விசாரித்து வருகின்றனர். பசுக்களின் உரிமையாளர் இருவரின் மீதும் புகார் அளித்ததால் இவர்களை கைது செய்துள்ளதாக ராசாத் காவல்துறை அதிகாரி ஜக்தீஷ் யாதவ் கூறியுள்ளார்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வடமாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கும், எதிரான கொடுமை தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி