ஆப்நகரம்

கேரளாவில் மாயமானவர்களில் இருவர் திருப்பூரில் கைது

கேரளாவில் மாயமான 21 பேரில் இருவரை, திருப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 14 Jul 2016, 5:30 pm
திருவனந்தபுரம்: கேரளாவில் மாயமான 21 பேரில் இருவரை, திருப்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 2 kerala people doubted isis arrested in thiruppur
கேரளாவில் மாயமானவர்களில் இருவர் திருப்பூரில் கைது


கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 17 பேரும், பாலக்கோடு மாவட்டத்தில் இருந்து 4 பேரும் மாயமாகினர். இவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருக்கலாம் என்று அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். தகவலறிந்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, பினராயி விஜயன் பதிலளித்தார். மேலும் மத்திய அரசிடமும் தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் மாயமான 21 பேரில் இருவரை, திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சமீர், சல்மான் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் கஞ்சா பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் கூறினர்.

அடுத்த செய்தி