ஆப்நகரம்

சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்!!

சிபிஐ நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்து இன்று காலை விசாரணை மேற்கொண்டது. அப்போது முக்கியமாக 20 கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Samayam Tamil 22 Aug 2019, 3:58 pm
நேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ விருந்தினர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு நேற்று இரவு தனி அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
Samayam Tamil C CBI


நேற்று இரவும் விசாரண செய்துள்ளனர். இன்று காலை 8 மணி முதல் சுமார் 2 மணி நேரம் இரண்டாம் கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல கேள்விகளுக்கு மழுப்பலாகவும், தெரியவில்லை என்றும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் முக்கியமாக 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அந்த முக்கியமான கேள்விகள் இவைதான்:

* உங்களது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டிய பின்னர் ஏன் ஆஜராகவில்லை

* உங்களது மற்றும் உங்களது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த ஷெல் நிறுவனங்கள் விவரம் கூறுங்கள்

விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம்- சிபிஐ சரமாரி புகார்!

* கார்த்தி ஏன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து பணம் பெற்றார்

* ஸ்பெயின், பிரிட்டன், மலேசியாவில் சொத்துக்கள் வாங்க எங்கிருந்து பணம் வந்தது

திறந்து வைக்கப்பட்ட அலுவலகத்திலேயே சிறை...இதுதான் காலத்தின் கொடுமை!!

* நிதியமைச்சராக இருந்து கொண்டு விதிகளை மீறி அந்நிய செலாவணி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியது ஏன்?

* டெல்லி நார்த் ப்ளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்

Article 370: எனக்கு புரிஞ்சிடுச்சு; சிதம்பரம் கைதுக்கு பின்னணி இதுதான் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி!

* இந்திராணியை தொடர்பு கொள்ளுமாறு மகன் கார்த்தியிடம் கூறியது உண்மையா?

* கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த பின் எங்கே இருந்தீர்கள்?

* மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது ஏன்?

* வெளிநாட்டு சொத்துக்களுக்கு வருவாய் ஆதாரம் என்ன?

* ஐஎன்எக்ஸ் மூலம் கிடைத்த வருமானத்தை எங்கு முதலீடு செய்தீர்கள்?

இதுபோன்று முக்கியமான கேள்விகளுடன் இந்திராணி முகர்ஜி வெளியிட்ட ரகசிய தகவல்களையும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதால் இந்த வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு உதவ வேண்டும் என்று தன்னிடம் சிதம்பரம் கேட்டுக் கொண்டதாக விசாரணையில் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு உதவிய வகையில் செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜிக் நிறுவனங்கள் வழியாக கார்த்திக்கு பணம் அனுப்பியதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ள இன்று நீதிமன்றத்தில் சிபிஐ அவகாசம் கேட்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி