ஆப்நகரம்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பஸ்: 20 பேர் பலி?

உத்தரப் பிரதேசம் மாநிலத்திவ் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் பற்றி எரிந்தன.

Samayam Tamil 11 Jan 2020, 12:23 am
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், தனியார் சொகுசுப் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து பயணிகள் 20 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது.
Samayam Tamil நடுரோட்டில் பற்றி எரிந்த பஸ்


உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூருக்கு சொகுசு பேருந்து 45க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்றிரவு பயணித்துக் கொண்டிருந்தது.

கன்னூஜ் மாவட்டம், சிப்பராமு என்ற இடத்துக்கு அருகே நெடுஞ்சாலையில் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

தீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

இந்த விபத்தில் பஸ் ஓடிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தன. இந்த கொடூர விபத்தில் பேருந்து பயணிகள் 20 பேர் தீயில் கருகி இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பேருந்திலிருந்து சிறுகாயங்களுடன் தப்பித்து உயிர்பிழைத்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னூஜ் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தீயணைப்பு வாகனங்கள் பேருந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகன விபத்துக்கு மோசமான சாலைகளும் காரணம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

அத்துடன், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடுரோட்டில் பேருந்து பற்றி எரிந்து ஏற்பட்டுள்ள விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி