ஆப்நகரம்

20 வயது வாலிபரால் 100 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

100 வயதுடைய மூதாட்டியை வன்கொடுமை செய்த புகாரில் 20 வயது இளைஞரை மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 25 Oct 2018, 4:57 pm
100 வயது பாட்டியை 20 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது
Samayam Tamil cover-pic
மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞர் கைது


மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள, நாடியா என்ற மாவட்டத்தில் வசித்து வரும் 100 வயது மூதாட்டி ஒருவரை, கடந்த 22ம் தேதி இரவு அர்கா பிஸ்வாஸ் அபியாஜித் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அந்த பாட்டியின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குற்றம் சட்டப்பட்டவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து கூறியுள்ள போலீசார், 'பாதிக்கப்பட்ட 100 வயதுடைய பெண்மணியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி கங்க்பிரசாத் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி