ஆப்நகரம்

குல்பர்க் சம்பவம்: தண்டனை ஒத்திவைப்பு

குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி சம்பவத்தில் 24 குற்றவாளிகளுக்கான தண்டனை வரும் 17 ஆம் தேக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 13 Jun 2016, 1:39 pm
குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி சம்பவத்தில் 24 குற்றவாளிகளுக்கான தண்டனை வரும் 17 ஆம் தேக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 2002 gulbarg society case court to pronounce the quantum of sentence on june 17
குல்பர்க் சம்பவம்: தண்டனை ஒத்திவைப்பு


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டில் நடந்த கோத்ரா சம்பவத்தை அடுத்து குல்பர்கா சொசைட்டியில் நடந்த வன்முறையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி., இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை அகமதாபாத் சிறப்பு விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 24 பேர் மீதான குற்றம் உறுதிபடுத்தப்பட்டது. இவர்களில் 11 பேர் கொலை குற்றவாளிகள் என்றும், மற்றவர்கள் சட்டத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்றும் கடந்த வாரம் அகமதாபாத் சிறப்பு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், தண்டனை தொடர்பான தீர்ப்பை இரண்டு முறை ஒத்தி வைத்து, இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவித்து இருந்தது. தற்போது மீண்டும் வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி