ஆப்நகரம்

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தான்: லாகூர் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TNN 9 Nov 2017, 12:18 pm
பாகிஸ்தான்: லாகூர் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil 21 people were died in pakistan bus accident
பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு.!


பாகிஸ்தானின் லாகூர் மாகாணத்திலுள்ள அட்டோக் நகரிலிருந்து ஆன்மிக பயணமாக புறப்பட்ட பேருந்து, ஓட்டுநரின் கவனக்குறைவால் கூர்முனையில் திரும்பும்போது பள்ளதாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களை காவல்துறையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி