ஆப்நகரம்

21 தமிழக மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ்

ஈரானில் மீன்பிடிக்கச் சென்று, சம்பளம் வழங்கப்படாமல் தவித்து வந்த 21 மீனவர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Aug 2018, 1:30 pm
ஈரானில் மீன்பிடிக்கச் சென்று, சம்பளம் வழங்கப்படாமல் தவித்து வந்த 21 மீனவர்களை மீட்டுள்ளதாகவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 651759-swaraj


தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மீன்பிடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்தமீனவர்கள் 21 பேர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரானுக்குமீன்பிடிக்க சென்றனர். அங்குள்ள நகிதக்கி என்ற பகுதியில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த முகமது சலா என்பவரின் விசைப்படகில் அவர்கள் மீன்பிடித்து வந்தனர். ஆனால் மீனவர்களுக்குகடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காமலும், சரிவர உணவு கொடுக்காமலும் படகு உரிமையாளர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


மேலும், மீனவர்களின் பாஸ்போர்ட் மற்றும் அடையாளஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு, தங்கியிருந்த அறையிலிருந்தஅவர்களை படகின் உரிமையாளர்கடந்த ஜூன் மாதம் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து உறவினர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்களை மீட்கநடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நேற்று டுவிட்டரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளர்.அதில்அவர் கூயிருப்பதாவது ’ஈரானின் நகிதக்கி பகுதியில் தவித்து வந்ததமிழக மீனவர்கள் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை நாளை மறுதினம் முதல்,சென்னைக்கு அழைத்துவர உள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி