ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் பிரதாப் 21 வயதில் நீதிபதிகளுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நீதிபதிகளுக்கான தகுதித் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது வரம்பு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 23 ஆக இருந்த குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைத்தது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்.
இதனால் அந்த மாநிலத்தின் ஜெய்ப்பூரில் மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் இந்த ஆண்டு நடைபெற்ற நீதிபதிகள் தகுதித் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றார். புதன்கிழமை வெளியான இத்தேர்வு முடிவில் பிரதாப் வெற்றி பெற்றிருக்கிறார்.
மயங்க் பிரதாப் தனது ஐந்தாண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் பூர்த்தி செய்தார். நீதிபதி தேர்வுக்கான நீண்ட காலமாக தயாரித்து வந்துள்ளார். அவருடைய முயற்சிக்கு அவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் மயங்க் பிரதாப் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக இளம் வயதில் நீதிபதியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இதனால் அந்த மாநிலத்தின் ஜெய்ப்பூரில் மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் இந்த ஆண்டு நடைபெற்ற நீதிபதிகள் தகுதித் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றார். புதன்கிழமை வெளியான இத்தேர்வு முடிவில் பிரதாப் வெற்றி பெற்றிருக்கிறார்.
மயங்க் பிரதாப் தனது ஐந்தாண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் பூர்த்தி செய்தார். நீதிபதி தேர்வுக்கான நீண்ட காலமாக தயாரித்து வந்துள்ளார். அவருடைய முயற்சிக்கு அவருக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் மயங்க் பிரதாப் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக இளம் வயதில் நீதிபதியாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.