ஆப்நகரம்

15 மாநிலங்கள்... 25 மாவட்டங்களில் இப்போ யாருக்கும் கொரோனா இல்லையாம்!!

ஊரடங்கு உத்தரவின் பயனாக, பல்வேறு மாநிலங்களுக்கு உட்பட்ட 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 13 Apr 2020, 7:47 pm
ஊரடங்கு உத்தரவின் பலனாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil no new cases


கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாட்டின் பொருளாதாரமும், அதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தீமையிலும் நன்மை என்பது போல, ஊரடங்கு உத்தரவின் பயனாக புதுச்சேரி, தெலங்கானா, ஹரியானா, ராஜ,ஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்குட்பட்ட 25 மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு சரி; இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!!

ஊரடங்கு அமவ்படுத்தப்படுவதற்கு முன்பு, இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு பலர் ஆளாகியிருந்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸுன் பிடியில் இருந்து விடுப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்:

அடுத்த செய்தி