ஆப்நகரம்

ஜம்முவில் மீண்டும் தலைத்தூக்கும் பயங்கரவாதம்.... கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலி, 25 பேர் படுகாயம்...

ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

Samayam Tamil 4 Nov 2019, 4:38 pm
மாநிலமாக இருந்த ஜம்மு -காஷ்மீர், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 31- ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதாவது, ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அன்று முதல் செயல்பட தொடங்கின.
Samayam Tamil ஜம்முவில் மீண்டும் தலைத்தூக்கும் பயங்கரவாதம்.... கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலி, 25 பேர் படுகாயம்...


மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதன் மூலம், ஆட்சி நிர்வாகத்தை தமது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் எனவும், அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டலாம் என்பது மத்திய அரசின் நோக்கம்.

தமது இந்த நோக்கத்தில் வெற்றிப் பெற, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு தான் வருகிறது. இருப்பினும், ஜம்மு -காஷ்மீரில் சமீப காலமாக அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று தான் வருகிறது.

இன்று காலையும்,ஸ்ரீநகரின் முக்கிய சந்தைப் பகுதியான மௌலானா ஆசாத் சாலையில் இன்று காலை, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர்.

மக்கள் கூட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 15 பேர் படுகாயமைடந்தனர்.
முன்னதாக, ஸ்ரீநகரின் ஹரி சிங் ஹைரோடில் நடத்தப்பட்ட மற்றொரு கையெறி குண்டு தாக்குதலில், ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 28 -ஆம் தேதி, வடக்கு காஷ்மீரின் சோப்பூர் நகர பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 19 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி