ஆப்நகரம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் 250 பாக். பயங்கரவாதிகள்!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் 250 பாக். பயங்கரவாதிகள்!

TNN 11 Oct 2016, 6:15 am
பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 250 தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 250 militants hiding in kashmir valley
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் 250 பாக். பயங்கரவாதிகள்!


லக்ஷர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொகமத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹூதின் அமைப்பை சேர்ந்த 250 பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில் மூன்று அமைப்பினரும் சேர்ந்து பதுங்கியிருந்து தாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இந்திய வீரர்களை உட்சபட்ட எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தாக்குதல் நடத்த 100 பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உரியில் தாக்குதல் நடத்தியதால் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இதுவரை 40 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலால் பாகிஸ்தானின் எல்லைப்பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 20 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போரின் போது பாகிஸ்தான் உபயோகிக்கும் பாதுகாப்பு அரண்களையும் இந்தியா தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி