ஆப்நகரம்

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் கவுண்ட்டவுண் தொடங்கியது

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை தொடங்கியது.

TNN 22 Jun 2017, 6:32 am
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை தொடங்கியது.
Samayam Tamil 28 hr countdown operation of pslv c38 began
பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் கவுண்ட்டவுண் தொடங்கியது


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘கார்ட்டோசாட் – 2’ என்ற செயற்கைக்கோள் பூமியை ஆராயும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏவும் ‘பி.எஸ்.எல்.வி. சி–38’ (PSLV C-38) ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுண் வியாழக்கிழமை அதிகாலை 5.29 மணிக்குத் தொடங்கியது.

28 மணி நேரம் நீடிக்கும் இந்த கவுண்ட்டவுண் முடிந்ததும் நாளை காலை 9.29க்கு ராக்கெட் விண்ணில் பாயும். இந்த ராக்கெட்டில் கொண்டு செல்லப்படும் கார்ட்டோசாட் - 2 செய்ற்கைக்கோள் பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல நோக்கத்திற்காக பயன்படும்.

712 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விண்ணில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி