ஆப்நகரம்

மாணவி பாலியல் பலாத்காரம்: ஜே.என்.யூ. மாணவர் மீது வழக்கு

ஹாஸ்டல் விடுதியில் முதலாமாண்டு பி.எச்.டி படிக்கும் மாணவியை அகில இந்திய மாணவர் சங்க தலைவன் அன்மோல் ரத்தன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

TNN 22 Aug 2016, 2:26 am
ஹாஸ்டல் விடுதியில் முதலாமாண்டு பி.எச்.டி படிக்கும் மாணவியை அகில இந்திய மாணவர் சங்க தலைவன் அன்மோல் ரத்தன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 28 year old jnu student allegedly drugged raped by fellow student
மாணவி பாலியல் பலாத்காரம்: ஜே.என்.யூ. மாணவர் மீது வழக்கு


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அகில இந்திய மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ரத்தன் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சைரட் படம் பார்க்க எனக்கு ஆவலாக இருக்கிறது. யாராவது அப்படத்தின் சிடி வைத்திருந்தால் எனக்கு தர முடியுமா என்று கேட்டுள்ளார்.

இதற்கு ரத்தன் பதிலளித்துள்ளார். அதில் என்னிடம் சைரட் படத்தின் சிடி இருக்கிறது. அந்த சிடி உங்களுக்கு வேண்டுமென்றால் பிரம்மபுத்திரா ஹாஸ்டலுக்கு வாங்க என்று கூறியுள்ளார். அப்போது ரத்தன் குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக போலீசார் ரத்தன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், அகில இந்திய மாணவர் தலைவர் ரத்தன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலிசார் இன்னும் ரத்தனை கைது செய்யபவில்லை என்பது குறிபிடத்தக்கது.

அடுத்த செய்தி