ஆப்நகரம்

மும்பை - ஹவுரா ரயில் தடம் புரண்டது

கொல்கத்தாவுக்கு சென்ற ஹவுரா மெயில் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டன.

Samayam Tamil 10 Jun 2018, 11:30 am
கொல்கத்தாவுக்கு சென்ற ஹவுரா மெயில் ரயிலின் மூன்று பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டன.
Samayam Tamil 64525952


மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு ஹவுரா மெயில் (12840) ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் இகாத்புரி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை வந்தபோது அதன் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த எதிர்பாராத விபத்தால் அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தம் பணியை ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டதையடுத்து, இனி வரும் ரயில்களின் சேவை வழக்கம்போல் தொடர உள்ளது.

அடுத்த செய்தி