ஆப்நகரம்

ஒன்றுடன் ஒன்று மோதவிருந்த 3 விமானங்கள்; எச்சரித்த இந்திய விமான போக்குவரத்து துறை!

புதுடெல்லி: வானில் அருகருகே வந்த 3 விமானங்கள் கடைசி நொடியில் மாற்றி விடப்பட்டன.

Samayam Tamil 29 Dec 2018, 9:37 pm
தலைநகர் டெல்லியில் மூன்று சர்வதேச விமானங்கள் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் அருகருகே வந்து மோதாமல் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராமில் இருந்து ஹாங்காங் நோக்கி நேஷனல் ஏர்வேஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது.
Samayam Tamil Mid Air Collision


அதேசமயம் பாங்காக்கில் இருந்து வியன்னாவிற்கு இவா என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. டச்சு நாட்டைச் சேர்ந்த கே.எல்.எம் என்ற விமானம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாங்காக்கிற்கு சென்று கொண்டிருந்தது.

இவை மூன்றும் டெல்லிக்கு அருகே சுமார் 1000 அடி உயரம் வித்தியாசத்தில் நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் 3 விமானங்களும் மோதும் நிலைக்கு சென்றன.

இதைக் கவனித்த இந்திய வான் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனே 3 விமானங்களின் விமானிகளை தொடர்பு கொண்டு எச்சரித்தனர். மேலும் விமானம் பறக்கும் உயர அளவையும் மாற்றி அமைத்தனர். இதற்கிடையில் விமான எச்சரிக்கை கருவியும் விமானிகளை எச்சரித்துள்ளது.

இதனால் ஒவ்வொரு விமானமும் மாற்று திசையில் விலகிச் சென்றன. இந்த சம்பவம் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி