ஆப்நகரம்

Kerala Flight Accident: சிக்கிய தமிழர்கள் மூவரும் நலம்?

கேரள விமான விபத்தில் சிக்கிய மூன்று தமிழர்களும் நலம் என்று மலப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Aug 2020, 10:02 am
வந்தே பாரத் திட்டம் மூலமாக துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், நேற்று நள்ளிரவில் எதிர்ப்பாராத விதமாக தவறான இடத்தில் தரையிறங்கி விபத்துக்குள்ளானது.
Samayam Tamil flight


இத் தொடர்பாக, அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன் இந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் 3 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அம்மூவரின் நலம் குறித்த தகவல் எதிர்ப்பார்க்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வந்த்தோடு, பலி எண்ணிக்கையும் உயர்ந்து வந்ததால் அச்சம் மிகுந்தது.

விமான விபத்து: அதிர்ச்சியில் பினராயி, பலி எண்ணிக்கை உயர்வு... விபத்தில் 3 தமிழர்கள்!

இந்நிலையில், தமிழக பயணிகள் மூவரும் நல்முடன் இருப்பதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா, மழை வெள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்த கேரளத்தில், இந்த சம்பவத்தால் கூட்தல் பரபரப்பு நிலவுகிறது.

அடுத்த செய்தி