ஆப்நகரம்

மின்னல் தாக்கி ஒரே நாளில் 30 பேர் பலி-ஒடிசாவில் நடந்த கொடுமை..!

ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

TNN 31 Jul 2016, 4:57 am
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil 30 died in lightning in odissa
மின்னல் தாக்கி ஒரே நாளில் 30 பேர் பலி-ஒடிசாவில் நடந்த கொடுமை..!


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசாவின் மேற்கு மாவட்டங்களான மயூர்பஞ்ச்,பலாசோர் மற்றும் பதக் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர்.பதக் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் மின்னலுக்கு பலியாகியுள்ளனர்.பாலசோர் மாவட்டத்தில் 7 பேர் மரணமடைந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்,விவசாய வேலையாட்கள் மற்றும் மரத்தின் கீழ் உறங்கிய அப்பாவி மக்களாவர்.
கடலில் மீன் பிடிக்கச் சென்ற குர்தா மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நால்வர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.30 பேரின் உயிரை பலி கொண்ட இந்த சம்பவத்திற்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.
மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவது ஒவ்வொரு ஆண்டும் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்து வருகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 1500 பேர் ஒடிசாவில் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி