ஆப்நகரம்

ஜெய்ப்பூரில் இளைஞர் சுட்டுக் கொலை: கவுரவ கொலையா என போலீசார் விசாரணை

ஜெய்ப்பூரில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 18 May 2017, 1:58 pm
ஜெய்ப்பூரில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 30 year old shot dead in jaipur police suspect honour killing
ஜெய்ப்பூரில் இளைஞர் சுட்டுக் கொலை: கவுரவ கொலையா என போலீசார் விசாரணை


அமித் நாயர் என்பவர் சிவில் என்ஜினியராக உள்ளார். இவர், மாற்று ஜாதியை சேர்ந்த மம்தா சவுத்திரி என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்துள்ளார். ஜெய்ப்பூரில் ஜகடாம்பா விகார் பகுதியில் இவர்கள் 2 பேரும் தனி வீடு பிடித்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அமித் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அவரை வெளியே அழைத்து, துப்பாக்கியால் சராமரியாக சுட்டுள்ளனர். இதில், அமித் படுகாயமடைந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர்களின் காதல் திருமணத்திற்கு, மம்தாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஒருவேளை, அவர்களே ஆள் வைத்து, கவுரவ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன்பேரில், ஜெய்ப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

A 30-year-old man was shot dead in his house located at Jagdamba Vihar in the city on Wednesday morning.

அடுத்த செய்தி