ஆப்நகரம்

300 இந்தியக் குழந்தைகளை அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்த கடத்தல் மன்னன் கைது..!!

கடந்த 2007ம் ஆண்டு முதல் குழந்தைகளை கடத்தி அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்த கடத்தல் மன்னன் ராஜூபாய் கம்லேவாலா என்கிற ராஜூபாயை மும்பை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 16 Aug 2018, 12:19 pm
கடந்த 2007ம் ஆண்டு முதல் குழந்தைகளை கடத்தி அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்த கடத்தல் மன்னன் ராஜூபாய் கம்லேவாலா என்கிற ராஜூபாயை மும்பை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil king-pin-arrested
பிரபல குழந்தை கடத்தல் குற்றவாளி மும்பையில் கைது..!!


மும்பையை சேர்ந்த ராஜூபாய் (50) என்பவர், குஜராத்தில் வறுமைப்பிடியில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த 11 முதல் 16 வயதிலான குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி, பிறகு அவர்களை தனது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் அவர்களுக்கு தெரியவந்தன. உடனே ராஜூபாயை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டினர்.

அதன்படி, தனது அடியாட்களை தொடர்பு கொள்ள ராஜூபாய் பயன்படுத்தம் வாட்ஸ்அப் எண் காவலர்களுக்கு கிடைத்தது. அதை டிராக் செய்த போலீசார் ராஜூபாயை கைது செய்தனர். அவருடன், இதே குற்றவழக்கில் தொடர்புடைய சிலரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் ரிஸ்வான் சோட்டானி (39), அஃப்சல் ஷெயிக் (35), டாஜ்யூதின் கான் (48) ஆகியவர்களுடன் காவலர் ஒருவரின் மகனான அமிர் கான் (26) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாலியல் தொழிலுக்கு வேண்டி குழந்தைகளை கடுத்துவது உள்ளிட்ட 3 குற்றங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகளிடம் நடைபெற்ற விசாரணையில் வறுமையான குடும்பங்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கப்படும் குழந்தைகளுக்கு பாஸ்போர்டுகளை முறைகேடாக தயாரித்து அதன் மூலம் அமெரிக்காவிற்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ராஜூபாயை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர், கடந்த மார்ச் மாதம் போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் தற்போது மீண்டும் பிடிப்பட்டுள்ளார்.

குழந்தை கடத்தல் மன்னன் ராஜுபாய் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அதை தொடர்ந்து வரும் ஆக்ஸ்டு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி