ஆப்நகரம்

ஒவ்வொரு வாரமும் 32 இளம் பெண்கள் மாயம்

உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு வாரமும் 32 இளம்பெண்கள் காணாமல் போகிறார்கள் என அந்த மாநில குற்றப் பதிவுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Aug 2018, 4:12 pm
உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு வாரமும் 32 இளம்பெண்கள் காணாமல் போகிறார்கள் என அந்த மாநில குற்றப் பதிவுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil _bee39266-9ada-11e8-9ea4-7619ca404631


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள உத்தரப் பிரதேச மாநில குற்றப் பதிவுகள் ஆணையம் கடந்த 2017ஆம் ஆண்டில் வாரம் தோறும் குறைந்தபட்சம் 32 இளம்பெண்கள் காணாமல் போவதாகத் தெரிவித்துள்ளது.

உமேஷ் குமார் குப்தா என்ற பெண்கள் நல ஆர்வலர் கோரிப் பெற்றுள்ள இத்தகவலில், அந்த மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் இளம்பெண்கள் காணாமல் போனதாக 1,675 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

“2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 435 இளம்பெண்களைக் காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கடத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.” என்று உமேஷ் குமார் குப்தா தெரிவிக்கிறார்.

அடுத்த செய்தி