ஆப்நகரம்

ஹிமாச்சல் பனிப்பொழிவில் சிக்கி 35 ஐஐடி மாணவர்கள் உட்பட 45 பேர் மாயம்!

கனமழை மற்றும் பனிப்பொழிவில் 35 மாணவர்களும், 45 வீரர்களும் சிக்கித் தவிக்கின்றனர்.

Samayam Tamil 25 Sep 2018, 11:46 am
ஐஐடி ரூர்கியைச் சேர்ந்த 35 மாணவர்கள் உட்பட 45 பேர் ஹிமாச்சல் பிரதேச மலைகளில் டிரக்கிங் சென்றிருந்தனர். அங்கு ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவால் 45 பேரும் மாயமாகி உள்ளனர்.
Samayam Tamil Himachal


இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மாயமான மாணவரின் தந்தையான ராஜ்விர் சிங், ஹம்தா பாஸிற்கு மாணவர்கள் குழுவினர் டிரக்கிங் சென்றனர். அங்கிருந்து சுற்றுலா தலமான மணாலிக்கு திரும்பி வந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்தக் குழுவினர் உடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டுள்ளது என்றார். ஹிமாச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

5 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காங்ரா, குல்லு, ஹமிர்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஆறுகளிலும், நீரோடைகளிலும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. பீஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

35 IIT Students Among 45 Trekkers Reportedly Missing In Himachal Pradesh.

அடுத்த செய்தி