ஆப்நகரம்

ஐ.எஸ்ஸால் கடத்தப்பட்ட இந்தியர்கள்; நம்பிக்கையூட்டும் சுஷ்மா சுவராஜ்...!

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

TNN 16 Jul 2017, 7:02 pm
டெல்லி: ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 39 abducted indians in iraq may be in jail
ஐ.எஸ்ஸால் கடத்தப்பட்ட இந்தியர்கள்; நம்பிக்கையூட்டும் சுஷ்மா சுவராஜ்...!


ஈராக்கில் வேலை பார்க்கச் சென்ற 39 இந்தியர்கள், கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டது. ஆனால் அவர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை அழைத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆறுதல் கூறினார். அப்போது, இணை அமைச்சர் விகே சிங், எம்ஜே அக்பர், மூத்த அமைச்சக அதிகாரிகள் உடனிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈராக்கின் பழமை வாய்ந்த மொசூல் நகரம் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து முழுவதுமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்தார்.

இதையடுத்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் விகே சிங் ஈராக்கிற்கு பயணித்தார். அவருக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் மேற்கு மொசூல் அருகே உள்ள பதுஷ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ஆம் தேதி, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜஃபாரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து மேலும் உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்று சுஷ்மா சுவராஜ் நம்பிக்கையூட்டினார். தற்போது பதுஷ் பகுதியில் அரசுப் படைகளுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

39 abducted Indians in Iraq may be in jail: Sushma Swaraj.

அடுத்த செய்தி