ஆப்நகரம்

4.96 லட்சம் விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி

2015ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் நேர்ந்த ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து விபத்துக்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அறிவித்துள்ளது.

TOI Contributor 8 Jan 2017, 9:20 am
2015ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் நேர்ந்த ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து விபத்துக்கள் குறித்த அறிக்கையை தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil 4 96 lakh traffic accidents 1 8 lakh deaths in 2015 ncrb
4.96 லட்சம் விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி


இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் பதிவான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து விபத்துக்கள் குறித்த புள்ளிவிவர அறிக்கையை தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் வெளியிட்டுள்ளது. இதன் படி கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 4.96 லட்சம் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், 1,77,423 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 23,219 பேர் சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து விபத்துக்களில் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (18,404), தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமான பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களின் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை (58,999) 2015ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான பலி எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்தில் நேர்ந்த விபத்துகள் குறித்த வழக்குப் பதிவுகளின் எண்ணிக்கை கேரளாவின் அதிகபட்சமாக உள்ளது (39,343). உத்தரப் பிரதேசம் (32,884), சட்டிஸ்கர் (14,977) ஆகிய மாநில்ங்கள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

இரு சக்கர வாகன விபத்துகளில் தான் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. 2015ல் மட்டும் 43,540 பேர் இரு சக்கர வாகன விபத்தில் பலியாகியுள்ளனர். 28,910 பேர் லாரி விபத்திலும் 12,408 பேர் பேருந்து விபத்திலும் பலியானவர்கள்.

குறைந்தபட்சம் 29,419 வழக்குகள் ரயில்வே விபத்து தொடர்பாக பதிவாகியுள்ளன. இவற்றில் 26,066 பேர் பலியாகியுள்ளனர். 4,055 பேர் காயமடைந்துள்ளனர். அதிகபட்ச ரயில்வே போக்குவரத்து விபத்துகள் மகாராஷ்டிராவில் (7,806) நடந்துள்ளன. அவற்றில் 4,719 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4431 விபத்துகளில் 4472 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி