ஆப்நகரம்

ஆந்திராவில் சாலை விபத்து: சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே தமிழக அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Samayam Tamil 24 Jul 2019, 4:05 pm
ஆந்திரா மாநிலத்தில் தமிழக அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 2 பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Andhra Accident


சென்னையை அடுத்த நங்கநல்லூரை சேர்ந்த முனி கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் காரில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா சென்றுள்ளனர். சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு நேற்று மாலை மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

Also Read: தமிழ் பேசும் நபர்கள் மீது கொடூர தாக்குதல்; கேரள காங்கிரஸ் பிரமுகருக்கு வலை!

அப்போது சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த கன்னமெட்டு என்ற இடத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து கார் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முனி கிருஷ்ணா, குமார் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Also Read: திண்டுக்கல்லில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20 மாணவர்கள் காயம்

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நகரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி