ஆப்நகரம்

பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 போ் பலி

பஞ்சாப் மாநிலம் சங்கூர் அருகே உள்ள பட்டாசு குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிாிழந்துள்ளனர்.

TOI Contributor 20 Sep 2017, 5:22 am
பஞ்சாப் மாநிலம் சங்கூர் அருகே உள்ள பட்டாசு குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிாிழந்துள்ளனர்.
Samayam Tamil 4 members died in punjab cracker fire accident
பஞ்சாப் மாநிலத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 போ் பலி


பஞ்சாப் மாநிலம் சங்கூர் மாவட்டத்தில் உள்ள சுளூர் காரத் அருகே உள்ள பட்டாசு குடோனில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்த நிலையில், தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

சில மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி அங்கிருந்த 4 பேர் உடல்கருகி உயிாிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 5 பேர் பலத்த தீ காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்துக்குள்ளான கட்டிடத்தில் மேலும் சிலா் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி