ஆப்நகரம்

​ செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 40 தமிழா்கள் கைது

ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 50 போ் தப்பிச் சென்றுல்லதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 10 Nov 2017, 1:23 pm
ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்த 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 50 போ் தப்பிச் சென்றுல்லதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 40 tamil peoples arrested in andhra pradesh
​ செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 40 தமிழா்கள் கைது


ஆந்திரா மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் அதிக அளவிலான செம்மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனப்பகுதியில் சமூக விரோதிகள் பலா் செம்மரங்களை வெட்டி கடத்துவது தொடா்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சமூக விரோதிகள் இடைத்தரகா்கள் மூலம் தமிழகப்பகுதியில் இருந்துதான் வேலையாட்களை அழைத்துச் செல்கின்றனா். இவா்கள் ஆந்திரா மாநிலத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணகிாி, திருவண்ணாமலை, வேலூா் உள்ளிட்டப்பகுதிகளில் இருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இன்று காலை ஆந்திர வனத்துறையினா் மேற்கொண்ட சோதனையில் சேஷாச்சலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள், ஒரு காா், ஒரு மினி லாரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். அவற்றுடன் வந்த 40 தமிழா்களும் கடப்பா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் 50க்கும் மேற்பட்டோா் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அம்மாநில வனத்துறையினா் தொிவித்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்டுள செம்மரக்கட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி