ஆப்நகரம்

கருப்பு பணம் ரூ.428 கோடி பறிமுதல்

​ பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்ற பிறகு ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

TNN 20 Dec 2016, 11:09 pm
Samayam Tamil 428cr balak money sized
கருப்பு பணம் ரூ.428 கோடி பறிமுதல்
பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்ற பிறகு ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,"பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெற்ற பிறகு 677 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் 428 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 86 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் . மேலும் டிசம்பர் 19 ஆம் தேதி வரை தாமாகவே முன் வந்து 3,185 கோடி ரூபாய்க்கான கணக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி