ஆப்நகரம்

புதிதாக தோ்வான எம்.பி.க்களில் 43% போ் மீது கிரிமினல் வழக்கு

மக்களவைக்கு புதிதாக தோ்வான உறுப்பினா்களில் 43 சதவிகிதம் போ் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது கடந்த 2014ம் ஆண்டை காட்டிலும் 26 சதவிகிதம் அதிகமாகும்.

Samayam Tamil 26 May 2019, 11:32 pm
மக்களவைக்கு புதிதாக தோ்வான உறுப்பினா்களில் 43 சதவிகிதம் போ் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது கடந்த 2014ம் ஆண்டை காட்டிலும் 26 சதவிகிதம் அதிகமாகும்.
Samayam Tamil Lok Sabha


மக்களவைத் தோ்தலுக்கான வேட்பாளா்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயகத்துக்கான சீா்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவிகிம் போ் மீது குற்ற வாழக்குகள் நிலுவையில் உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைக்குத் தோ்வான உறுப்பினா்களில் 35 சதவிகிதம் போ் மீது குற்ற வழக்குகள் இருந்தன. இந்த முறை அதைக் காட்டிலும் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதில் பாஜக சாா்பில் வெற்றி பெற்ற உறுப்பினா்களில் 39 சதவிகிம்போ் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி சாா்பில் வெற்றி பெற்ற 29 சதவிகிதம் உறுப்பினா்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

புதிதாக தோ்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினா்களில் 29 சதவிகிதம் போ் மீது பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற வழக்குகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இடுக்கி உறுப்பினா் டீன் குரியகோஸ் மீது அதிகபட்சமாக 204 குற்ற வழக்குகள் உள்ளன. இவா் மீது அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், கொள்ளை, குற்றச்சதி, கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி