ஆப்நகரம்

மும்பையில் மகளுடன் தேர்வு எழுதிய 43 வயது தாய்

: மகாராஷ்ரா தலைநகர் மும்பையில் தனது மகளுடன் , 43 வயதான தாய் ,10 வகுப்பு தேர்வு எழுதியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Mar 2016, 3:00 pm
மும்பை : மகாராஷ்ரா தலைநகர் மும்பையில் தனது மகளுடன் , 43 வயதான தாய் ,10 வகுப்பு தேர்வு எழுதியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 43 year old parel homemaker takes ssc exam with teen daughter
மும்பையில் மகளுடன் தேர்வு எழுதிய 43 வயது தாய்


சரித்தா சகாதே (43 ), என்ற பெண்ணுக்கு ஷிட்டிஜா , ஷுருத்திக்கா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். சரித்தா சகாதே தனது குடும்பத்துடன் மும்மையில் வசித்து வருகிறார். சரித்தா சகாதே 4 ஆம் வகுப்பு படிக்குபோது தனது குடும்ப பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு பள்ளிக்கு செல்வதை நிறுத்திக்கொண்டார். அதன் பின் திருமணம் செய்துக்கொண்டு தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் , மும்பையில் உள்ள் ஒரு இரவு பாடசாலையில் சரித்தா சகாதே 8 ஆம் வகுப்பு சேர்ந்து தனது படிப்பை மீண்டும் தொடர்ந்து வந்தார். அதே நேரம் அவரது இளைய மகளான ஷுருத்திக்காவும் 8 ம் வகுப்பு படித்து வந்தது கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து சரித்தாவின் மூத்த மகள் ஷிட்டிஜா கூறுகையில் , தனது தங்கையும் ,தாயும் 8 ஆம் வகுப்பு முதல் சேர்ந்து படித்து வருவதாக தெரிவித்தார்.
பின்னர் சரித்தா சகாதே கூறுகையில் , 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு செல்வது தயக்கமாக இருந்தது என்றும் இருப்பினும் தனது கணவர் மற்றும் மகள்கள் கொடுத்த ஊக்கவும் , தன்னம்பிக்கையும் தன்னை பத்தாம் வகுப்பு தேர்வு வரை கொண்டுவந்துள்ளது என்றார்.
இந்த ஆண்டு மும்பையில் மட்டும் ,30 வயதுக்கு மேல் உள்ள , மொத்தம் 1,532 பேர் , 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளதாக மகாராஷ்ரா கல்விதுறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி