ஆப்நகரம்

எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்; பெண் ஒருவர் பரிதாப பலி...!

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் பலியானார்.

TNN 12 Aug 2017, 8:26 am
ஜம்மு: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் பலியானார்.
Samayam Tamil 45 year old lady has lost her life in ceasefire violation
எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல்; பெண் ஒருவர் பரிதாப பலி...!


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

சில சமயங்களில் தாக்குதல் சம்பவங்களை பயன்படுத்தி, தீவிரவாதிகளும் ஊடுருவி விடுகின்றனர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே எந்தவித அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட இயலாது சூழல் ஏற்பட்டு விடுகிறது.

இருநாடுகளுக்கும் இடையே போக்குவரத்தை அடியோடு நிறுத்தும் சம்பவங்கள் வரை சென்றுள்ளன. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கலரூஸ் பகுதியில் உள்ள 41 ஆர்.ஆர் ராணுவ தலைமையகத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து தீவிரவாதிகளை வளைத்து பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் காஷ்மீரின் மெந்தர் பகுதியில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

மேலும் கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

J&K: A 45-year old lady has lost her life in ceasefire violation & shelling by Pakistan during early morning hours, in Mendhar Sector.

அடுத்த செய்தி