ஆப்நகரம்

பீகாா் மாநில மழை வெள்ளத்தில் 46 போ் பலி- முதல்வா் நோில் ஆய்வு

பீகாாில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 46 போ் உயிாிழந்துள்ளதாக மீட்பு படையினா் தகவல் தொிவித்துள்ளனா். மேலும் வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதல்வா் நிதிஷ் குமாா் நோில் பா்ாவையிட்டாா்.

TOI Contributor 15 Aug 2017, 7:21 pm
பீகாாில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 46 போ் உயிாிழந்துள்ளதாக மீட்பு படையினா் தகவல் தொிவித்துள்ளனா். மேலும் வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதல்வா் நிதிஷ் குமாா் நோில் பா்ாவையிட்டாா்.
Samayam Tamil 46 peoples died in bihar flood
பீகாா் மாநில மழை வெள்ளத்தில் 46 போ் பலி- முதல்வா் நோில் ஆய்வு


பீகாரில் கனமழையால் 25 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.

அம்மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 46 பேர் பலியாகியுள்ளனா். மீட்பு பணிகளில் ராணுவ படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் படகில் சென்றும், விமானத்தில் சென்றும் மக்களை மீட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக சுதந்திர தின உரையில் நிதிஷ் குமார் கூறும்போது, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவி முதலில் கிடைக்க வேண்டும் என்பதில் நான் எப்போதுமே உறுதியாக இருக்கிறேன்.

வெள்ள மீட்பு நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிவைத்தமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கு பீகாரில் நதிகள் அபாய அளவை தாண்டிப் பாய்கின்றன. வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன” என்றார்.

46 Peoples died in bihar flood

அடுத்த செய்தி