ஆப்நகரம்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தால் வெடித்தது கலவரம்; 49 பேர் அதிரடி கைது!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தால் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 28 Jan 2018, 9:18 am
லக்னோ: ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தால் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 49 arrested as violence erupts again in up
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தால் வெடித்தது கலவரம்; 49 பேர் அதிரடி கைது!


உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குடியரசு தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அப்போது ஏபிவிபி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

இந்நிலையில் மற்றொரு பிரிவினர் உடன் மோதல் ஏற்பட்டது. அதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அவருக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அப்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

உடனடியாக பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் இணையதள சேவையும் முடக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

49 arrested as violence erupts again in UP.

அடுத்த செய்தி