ஆப்நகரம்

உத்தரபிரதேசத்தில் 49 குழந்தைகள் மீண்டும் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம், ஃபரூக்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மேலும் 49 குழந்தைகள் உயிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 4 Sep 2017, 4:28 pm
உத்தரபிரதேச மாநிலம், ஃபரூக்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மேலும் 49 குழந்தைகள் உயிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 49 chidren were died in farrukhabad government hospital
உத்தரபிரதேசத்தில் 49 குழந்தைகள் மீண்டும் உயிரிழப்பு


உ.பி.மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருந்துள்ளது. இதனால் எற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை காராணமாக மூளைவீக்கம் ஏற்பட்டு ஒரே நாளில் மட்டும் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகின.

இந்த நிலையில், உ.பி.,யின் பரூகாபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் 30 குழந்தைகள் நோய் தொற்று காரணமாகவும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போதும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததும், மருந்துகள் வழங்காததும் மற்றும் ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே குழந்தைகள் உயிழக்க முக்கியக் காரணம் என குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மீது, உ.பி.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோரக்பூர் சம்பவத்தின் வடு ஆறுவதற்குளேயே தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

49 chidren were died in farrukhabad government hospital.

அடுத்த செய்தி