ஆப்நகரம்

பீகார்; சிறையில் இருந்து தப்பிய கைதிகளால் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 31 Dec 2016, 9:45 am
பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 5 prisoners escaped from central jail in buxar bihar late last night
பீகார்; சிறையில் இருந்து தப்பிய கைதிகளால் பரபரப்பு


சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சிறையை தகர்த்து, காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் தப்பிய சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர், அவர்களில் சிலர் தேடி கண்டுபிடிக்கப்பட்டனர். இதேபோன்று, போபால் மத்திய சிறையில் இருந்து சிமி அமைப்பினர் 8 பேர் தப்பியோடிய நிலையில், அவர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நாட்டின் முக்கிய சிறைகளில் ஒன்றான பக்சார் சிறையில் இருந்து கைதிகள் 5 பேர் தற்போது தப்பியுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Five prisoners escaped from Central Jail in Bihar's Buxar late Friday night, ANI reported.

அடுத்த செய்தி